சிந்திக்க வைக்கும் ஒட்டகத்தின் படைப்பு!
ஒட்டகத்தின் மூன்று இமைகள்-
ஒட்டகம் மூன்று இமைகளை கொண்டுள்ளது. ஒன்று கண்ணின் மேல்பகுதியிலும்,மற்றது கீழ்பகுதியிலும் அமைந்துள்ளது. மூன்றாவது கண்ணின் (nictitating membrane) பக்கவாட்டில் மூடி,திறக்கும்.இது கண்ணில் தூசிபடாமலும்,கண்ணுக்கு தேவையான ஈரத்தையும் வழங்குவதோடு இவ்விமை ஒளியை ஊடுபுகவிடக்கூடியது (translucent). இதனால் இவ்விமையை மூடிக்கொண்டும் ஒட்டகத்தால் பார்க்க இயலும்.
பாலைவனப்புயலின் போது இந்த இமையை மூடிக்கொண்டு பாதையை அறிந்து செல்லமுடியும்
ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?
(திருக்குர்ஆன் 88:17)
Comments
Post a Comment